/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முத்துமாரியம்மனுக்கு 350 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்தி
/
முத்துமாரியம்மனுக்கு 350 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்தி
முத்துமாரியம்மனுக்கு 350 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்தி
முத்துமாரியம்மனுக்கு 350 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்தி
ADDED : ஜூலை 17, 2025 11:33 PM

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் அபிஷேகம் செய்வதற்கு நேற்று ஏராளமான பெண் பக்தர்கள் பச்சை மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடிமாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். ஆடி வெள்ளியன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதோடு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியன்று அம்மனுக்கு பச்சை மஞ்சள் அரைத்து அபிஷேகம் செய்யப்படும். இந்த மஞ்சளை அரைப்பதற்காக நேற்று மாலை கோயில் வளாகத்தில் 51 அம்மி கல்லில் அரைத்தனர்.
மாலையில் மீனாட்சிபுரம், அண்ணா நகர், முத்துப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்பக்தர்கள் அபிஷேகத்திற்கு தேவையான 350 கிலோ மஞ்சளை அரைக்க தொடங்கினர்.
இன்று அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் அபிஷேகம் நடைபெறும்.