sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சுப்பன் கால்வாயை ரூ.9.80 கோடியில் துார்வார திட்ட மதிப்பீடு தயார்

/

சுப்பன் கால்வாயை ரூ.9.80 கோடியில் துார்வார திட்ட மதிப்பீடு தயார்

சுப்பன் கால்வாயை ரூ.9.80 கோடியில் துார்வார திட்ட மதிப்பீடு தயார்

சுப்பன் கால்வாயை ரூ.9.80 கோடியில் துார்வார திட்ட மதிப்பீடு தயார்


ADDED : டிச 19, 2024 04:51 AM

Google News

ADDED : டிச 19, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி விவசாயத்திற்காக உருவாக்கப்பட்ட சுப்பன் கால்வாயை துார்வாரி செயல்படுத்த ரூ.9.80 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானாமதுரை வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் சுப்பன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.வைகையில் உபரியாக கலக்கும் நீரை திருப்பி விட உப்பாற்றில் கள்ளர்குளம் என்னும் இடத்தில் சுப்பன் கால்வாய் கட்டும் திட்டத்தில் அணை கட்டப்பட்டு கால்வாய் வெட்டப்பட்டது.

இத்திட்டத்தால் மானாமதுரை,இளையான்குடி தாலுகாவில் 40க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மூலம் 8000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது உப்பாற்றில் பெருவெள்ளம் ஓடி அது வைகை ஆற்றில் வீணாக கலந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் இளையான்குடி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் பேச்சு வார்த்தை இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையிலும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் இளையான்குடி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் ரூ.9.80 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us