sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சர்க்கரை நோய் மாத்திரை மருத்துவமனையில் தட்டுப்பாடு

/

 சர்க்கரை நோய் மாத்திரை மருத்துவமனையில் தட்டுப்பாடு

 சர்க்கரை நோய் மாத்திரை மருத்துவமனையில் தட்டுப்பாடு

 சர்க்கரை நோய் மாத்திரை மருத்துவமனையில் தட்டுப்பாடு


ADDED : டிச 04, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக்கூடிய வில்டாக்ளிப்டின்' மாத்திரைக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தமிழக மருந்து கழகம் வழங்குகிறது. தட்டுப்பாடு உள்ள சில மருந்து மாத்திரைகளை மருத்துவத்துறை நிர்வாகம் உள்ளூரில் கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு வழங்குகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வில்டாக்ளிப்டின் மாத்திரைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த மாத்திரைகள் உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதேபோல் நமது உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கிறது.

மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், வில்டாக்ளிப்டின் மாத்திரை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்து வாரத்தில் மாத்திரை வினியோகம் செய்யப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us