sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை இருவர் காயம், 10 வீடுகள் சேதம்

/

 சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை இருவர் காயம், 10 வீடுகள் சேதம்

 சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை இருவர் காயம், 10 வீடுகள் சேதம்

 சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை இருவர் காயம், 10 வீடுகள் சேதம்


ADDED : டிச 04, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு இளையான்குடி, சிவகங்கையில் 10 வீடுகள் வரை சேதமானது. அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை பதிவானது.

டிட்வா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை பதிவு நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 54.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 45 மி.மீ., திருப்புத்துாரில் 41.20 மி.மீ., தேவகோட்டை 12 மி.மீ., சிவகங்கையில் 2 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு மாவட்ட அளவில் 9 ஓட்டு வீடுகள் பகுதியும், ஒரு வீடு முழுவதும் சேதமானது.

தேவகோட்டை நித்யகல்யாணிபுரத்தில் செல்வி என்பவரது ஓட்டு வீடு முழுவதும் சேதமானது. இதில், வீட்டில் படுத்திருந்த அவரது கணவர் பாண்டி, செல்வி இருவரும் பலத்த காயமுற்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us