sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஏமாற்றம் அறிவுசார் மையம் அமைக்கப்படாததால் புத்தகங்களை தேடும் இளைஞர்கள்

/

ஏமாற்றம் அறிவுசார் மையம் அமைக்கப்படாததால் புத்தகங்களை தேடும் இளைஞர்கள்

ஏமாற்றம் அறிவுசார் மையம் அமைக்கப்படாததால் புத்தகங்களை தேடும் இளைஞர்கள்

ஏமாற்றம் அறிவுசார் மையம் அமைக்கப்படாததால் புத்தகங்களை தேடும் இளைஞர்கள்


ADDED : ஆக 09, 2025 03:24 AM

Google News

ADDED : ஆக 09, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவாக தரம் உயர்ந்தும் நுாலகத்தில் அறிவு சார் மையம் அமையாதது மாணவர்கள், வேலை தேடுவோரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

இப்பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் 1964 ல் கிளை நுாலகம் ஓட்டு கட்டடத்தில் துவக்கப்பட்டது. 60 ஆண்டுகளைக் கடந்தும் பாழடைந்த அதே கட்டடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

2019ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் சிங்கம்புணரி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. கிளை நுாலகத்தை தாலுகா நுாலகமாக தரம் உயர்த்தி அறிவு சார் மையமும் 12 மணி நேர படிப்பகமும் அமைக்க மாணவர்களும் இளைஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சிறிய நுாலக கட்டடத்தை கட்டி வருகின்றனர். அதுவும் கட்டுமான பணி பாதியிலேயே நிற்கிறது.

இந்தக் கட்டடத்தில் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே இடம் இல்லாத நிலை இருக்கும்போது, அங்கு மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கோ, டிஜிட்டல் நுாலகத்தை நிறுவுவதற்கோ, இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிவுசார் மையம் அமைப்பதற்கோ இடம் போதாது. இதனால் மாணவர்களும் இளைஞர்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். இவ்வொன்றியத்தில் விவசாயத்தையே பிரதானமாகக் கொண்ட பின்தங்கிய கிராமங்கள் அதிகமாக உள்ள நிலையில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்புக்காக கடுமையாக போராடி வருகின்றனர். சிங்கம்புணரியில் அதற்கான படிப்பு மையம் இல்லாததால் மதுரை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர். நூலகத்துடன் சேர்ந்த அறிவு சார் மையத்தை சிங்கம்புணரியில் அமைப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் யாரும் முயலவில்லை. எனவே சிங்கம்புணரியில் விரைவாக நுாலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us