sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மருத்துவமனையில் தகராறு

/

மருத்துவமனையில் தகராறு

மருத்துவமனையில் தகராறு

மருத்துவமனையில் தகராறு


ADDED : பிப் 07, 2025 05:18 AM

Google News

ADDED : பிப் 07, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மருத்துவமனையில் தகராறு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிப்.3ல் மதுரை சின்ன அனுப்பானடியை சேர்ந்த குமார் மகன் சஞ்சய் குமார் 19 மானாமதுரையில் வாகன விபத்துக்குள்ளாகி தலையில் அடிபட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உறவினரான மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் மணி 25 போதையில் தகராறில் ஈடுபட்டு கல்லை வீசி கண்ணாடியை உடைத்துள்ளார். இது குறித்து துணை நிலைய மருத்துவர் முகமது ரபி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆப்பரேட்டர் பலி

காரைக்குடி: நாட்டரசன் கோட்டை கண்ணா தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் காளீஸ்வரன் 24. ஐ.டி.ஐ., படித்துவிட்டு காரைக்குடி கிரீன் சிட்டி அருகே ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். வேலை செய்து கொண்டிருந்தபோது, மிஷினில் காளீஸ்வரன் கை சிக்கியது. இதில், படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். காளீஸ்வரன் தந்தை வீரபத்திரன் கொடுத்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தொழிலாளி பலி

சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே மேலவண்ணாரிருப்பை சேர்ந்தவர் முத்துமலையாண்டி மனைவி மல்லிகா 50. இவர் சிங்கம்புணரியில் காரைக்குடி ரோட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணியின் போது மாவு அரைக்கும் மோட்டார் பெல்டில் விழுந்து துாக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

இளைஞர் மீது போக்சோ வழக்கு

காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 17 வயது சிறுமி வந்துள்ளார். சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய தெரியவந்தது. டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையில் காளிதாஸ் என்ற இளைஞர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதும், இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவருக்கே உறவினர்கள் திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்தது. காளிதாஸ் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி தற்கொலை

தேவகோட்டை: கோயம்புத்துார் சவரிபாளையத்தை சேர்ந்தவர் ராமசுப்பு 68., இவரது மனைவி விஜயலட்சுமி 60., ராமசுப்பு ஆறாவயல் மில்லில் சில ஆண்டுகளுக்கு முன் பணி செய்தார். தற்போது கணவன் மனைவி பிரிந்து மனைவி கோயம்புத்தூரிலும் ராமசுப்பு தேவகோட்டையிலும் வசித்து வந்தனர். ராமசுப்பு தேவகோட்டை தானுச்சாவூரணி ரோட்டில் உள்ள வீட்டில் துாக்கிட்டு இறந்து போனார்.மனைவி விஜயலட்சுமி புகாரை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us