/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் தொழில் துவங்க கடனுதவி; மாவட்ட தொழில் மையம் தகவல்
/
தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் தொழில் துவங்க கடனுதவி; மாவட்ட தொழில் மையம் தகவல்
தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் தொழில் துவங்க கடனுதவி; மாவட்ட தொழில் மையம் தகவல்
தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் தொழில் துவங்க கடனுதவி; மாவட்ட தொழில் மையம் தகவல்
ADDED : நவ 06, 2024 07:55 AM
சிவகங்கை : தொழில் முனைவோர், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு தகுதியின்படி அரசு கடனுதவி வழங்குகிறது என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் கீழ் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) காரைக்குடியில் இயங்குகிறது. இங்கு குறு உற்பத்தி நிறுவனத்திற்கு 7 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை, மூலதன கடன்கள் அசையா சொத்து அடமானத்தின் பேரில் வழங்கப்படும். இத்திட்டத்தில் கடன் பெற விரும்புவோர் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு மேல் இருக்க கூடாது.
தாய்கோ வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்க வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே இயங்கும் குறு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு மதிப்பீடு 600 புள்ளிக்கு குறையாமல் மற்றும் 2 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கும் நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
திட்ட மதிப்பில் பொது பிரிவினர் 25 சதவீதம், சிறப்பு பிரிவினர் 10 சதவீதம் சொந்த முதலீடாக செலுத்த வேண்டும். விபரங்களுக்கு மேலாளர், தாய்கோ வங்கி, 100 அடி ரோடு, காரைக்குடி அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிவகங்கையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.