sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு

/

காரைக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு

காரைக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு

காரைக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு

1


ADDED : ஜன 05, 2025 06:53 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:53 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரை சிலர் மின் மோட்டார் மூலம் எடுப்பதால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காரைக்குடியில் உள்ள 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சம்பை ஊற்றுப் பகுதியில் 13 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர நகரின் பல பகுதிகளிலும் 24 போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

காலை மற்றும் மாலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் செக்காலை, செக்காலை தெற்கு 3வது வீதி, இன்கம்டேக்ஸ், சுப்பிரமணியபுரம், சூடாமணிபுரம், கணேசபுரம், கழனிவாசல், பர்மா காலனி உட்பட நகரின் பல பகுதிகளில் சில வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர். குடிநீர் கிடைக்காமல் பணம் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் சித்ரா கூறுகையில்: இதுகுறித்து வந்த புகாரின் பேரில் ஆய்வு செய்து மின் மோட்டார் களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.






      Dinamalar
      Follow us