ADDED : மே 16, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ஆவுடைப்பொய்கையை சேர்ந்தவர் சூசை 63. இவர் நேற்று காலை காரைக்குடியில் இருந்து பைக்கில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம், பைக்கில் மோதியது. இதில் காயமடைந்த சூசை சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார், அவரது உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.