ADDED : அக் 31, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விசாலாட்சி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் நவ. 4 ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது.
செயற்பொறியாளர்/ பகிர்மானம்/ சிவகங்கை கோட்ட அலுவலகத்தில்  நடக்கும் இந்த கூட்டத்தில் அந்த கோட்டத்திற்குட்பட்ட பயனீட்டாளர்கள் குறைகளை தெரிவித்து  நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

