sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அவசரகதியில் குடிநீர் குழாய் பதிப்பு; வீட்டுச்சுவருக்கு ஆபத்து என அச்சம்

/

அவசரகதியில் குடிநீர் குழாய் பதிப்பு; வீட்டுச்சுவருக்கு ஆபத்து என அச்சம்

அவசரகதியில் குடிநீர் குழாய் பதிப்பு; வீட்டுச்சுவருக்கு ஆபத்து என அச்சம்

அவசரகதியில் குடிநீர் குழாய் பதிப்பு; வீட்டுச்சுவருக்கு ஆபத்து என அச்சம்


ADDED : பிப் 07, 2024 12:12 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேருராட்சியில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டப்பணிகளுக்காக சிமென்ட் சாலைகளை அவசர கதியில் தோண்டுவதால் அருகிலிருக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

இப்பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. பல தெருக்களில் இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டு குழாய் பதிப்பிற்கு பிறகு அவை மீண்டும் மூடப்படுகிறது.

பல இடங்களில் பெரிய மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு முழு சாலையும் தோண்டப்படுகிறது.

தார் சாலை, பேவர் பிளாக், மண் சாலைகளை சுலபமாக தோண்டி குழாய்கள் பதிக்கப்படும் நிலையில் நகரில் பல இடங்களில் சிமென்ட் சாலைகளை அவசர கதியில் உடைத்து தோண்டுவதால் ரோட்டை ஒட்டியுள்ள வீடுகளின் சுவர்களில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மேற்பார்வை இல்லாமலும் வீடுகளின் சுவர்களில் ஏற்படும் பாதிப்புகளை மனதில் கொள்ளாமலும் ஒப்பந்தகாரர்கள் பெரிய இயந்திரங்களை கொண்டே சிமென்ட் ரோடுகளை உடைத்து தோண்டிவருகின்றனர்.

எனவே குழாய் பதிக்கும் பணியை அலுவலர்கள் முறையாக பார்வையிட்டு குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராமல் தடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us