ADDED : பிப் 12, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே டிப்பர் லாரி மோதி டூ வீலரில் சென்ற விவசாயி இறந்தார். கட்டாணிபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 58. விவசாயி.
இவரும் அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல் என்பவரும் டூவீலரில் கட்டாணிபட்டியில் இருந்து தும்பைப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எம் சாண்ட் மணல் ஏற்றுவதற்காக மல்லாக்கோட்டை சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் டூவீலர் மோதியது. இதில் பாலசுப்ரமணியன் பலியானார். தங்கவேல் காயமடைந்தார். எஸ்.எஸ்.,கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.