sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மாரந்தையில் கண்மாய் நீர் எடுக்க தடை  காயும் நெற்பயிர்: விவசாயிகள் புகார்

/

 மாரந்தையில் கண்மாய் நீர் எடுக்க தடை  காயும் நெற்பயிர்: விவசாயிகள் புகார்

 மாரந்தையில் கண்மாய் நீர் எடுக்க தடை  காயும் நெற்பயிர்: விவசாயிகள் புகார்

 மாரந்தையில் கண்மாய் நீர் எடுக்க தடை  காயும் நெற்பயிர்: விவசாயிகள் புகார்


ADDED : டிச 27, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் அருகே மாரந்தையில் போதிய தண்ணீரின்றி காய்ந்த நெற்பயிர்களுடன் சிவகங்கை கலெக்டர் பொற் கொடியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

மாரந்தை கிராமத்தில் 250 ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.

இப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதால், பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரினை கண்மாய்களில் தேக்கி அதன்மூலம் ஒரு போக நெல் சாகுபடி செய்கின்றனர்.

இந்த ஆண்டு பருவ மழையை வைத்து விவசாயிகள் மானாவாரியாக நெல் நடவு செய்துள்ளனர்.

தற்போது இந்த பயிர் முளைத்து விளைந்து வருகிறது.தொடர்ந்து மழை இல்லாததால், பயிர்களை காப்பாற்ற மாரந்தை பொதுப்பணித்துறை கண்மாயில் தேங்கியுள்ள நீரை பம்ப்செட் மூலம் முறைவைத்து பாய்ச்ச கிராமத்தினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் சிலர் மாரந்தை வி.ஏ.ஓ.,விடம் புகார் தெரிவித்து, கண்மாயில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற நீர் எடுக்க முடியாத வகையில் தடை விதித்து விட்டனர்.

இதனால் நெற்பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே விளைந்த நெற்பயிர்களை பாதுகாக்க கண்மாயில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மாரந்தை கிராம விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களுடன், நேற்று சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர். அவர் பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம விவசாயிகளுக்கு உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us