sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மூதாட்டியின் ஓட்டு வீட்டுக்கு ரூ.6 ஆயிரம் மின் கட்டணம்

/

 மூதாட்டியின் ஓட்டு வீட்டுக்கு ரூ.6 ஆயிரம் மின் கட்டணம்

 மூதாட்டியின் ஓட்டு வீட்டுக்கு ரூ.6 ஆயிரம் மின் கட்டணம்

 மூதாட்டியின் ஓட்டு வீட்டுக்கு ரூ.6 ஆயிரம் மின் கட்டணம்


ADDED : டிச 27, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே சொட்டதட்டி கிராமத்தில் ஓட்டு வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியினருக்கு ரூ.5967 மின் கட்டணம் வந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி 75, முனியம்மாள் 70, தம்பதி. கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.

வயது முதிர்வு காரணமாக கூலி வேலைக்கு கூட செல்ல முடியாமல் அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையை வைத்து வாழ்ந்து வருகின்றனர். இரண்டு பேர் மட்டுமே இருப்பதால் வீட்டில் மூன்று எல்.இ.டி., விளக்கு, ஒரே ஒரு மின் விசிறி பயன்படுத்துகின்றனர்.

இரு மாதங்களுக்கு ஒரு முறை ஏழு ரூபாய், 45 ரூபாய், 65 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

நவம்பரில் மின்கட்டணம் கணக்கிடும் போது ஐந்தாயிரத்து 967 ரூபாய் என கணக்கிட்டு செலுத்த வலியுறுத்தியுள்ளனர்.

டிசம்பர் 15ம் தேதி கடைசி நாள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வளவு மின்கட்டணம் வர வாய்ப்பே இல்லை என கூறி பொட்டப்பாளையம் துணை மின் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

ஆய்வு செய்த ஊழியர்கள் மீட்டர் பழுது இல்லை, மின் சாரம் செலவு செய்ததற்கான கட்டணம் தான் இது,

எனவே ஐந்தாயிரத்து 967 ரூபாய் மின் கட்டணத்தை செலுத்த வலி யுறுத்தி சென்றுள்ளனர்.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மீட்டரில் பழுது ஏதும் கிடையாது, டிஜிட்டல் மீட்டரில் கணக்கிடும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம், பிரச்னை குறித்து உயர் அதிகாரி களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.






      Dinamalar
      Follow us