/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
தேவகோட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 12, 2024 05:21 AM

சிவகங்கை: தேவகோட்டையில் நாளை (டிச., 13) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாதந்தோறும் கடைசி வெள்ளியன்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்,அனைத்து விவசாயிகளுக்கும் பேச வாய்ப்பு அளிக்க நேரம் இல்லை. இதனால், தேவகோட்டை பகுதி விவசாயிகளின் நலன் கருதி,ஒவ்வொரு மாதமும் 2 வது வெள்ளியன்று தேவகோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.
நாளை (டிச.,13) தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.இதில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள். தேவகோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.