sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஊற்றெடுக்கும் கிணறுகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

ஊற்றெடுக்கும் கிணறுகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஊற்றெடுக்கும் கிணறுகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஊற்றெடுக்கும் கிணறுகளால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜன 02, 2025 05:04 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுத்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இத்தாலுகாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையால் சிங்கம்புணரி பிரான்மலை, ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில கண்மாய்கள் மறுகால் பாய்ந்தும் வருகிறது.

பிரான்மலை, ஒடுவன்பட்டி அசரீரி விழுந்தான் மலைகளில் பெய்த மழை நீர் சுனைகள் வழியாக கசிந்து அடிவார கிராமங்களில் ஊற்றாக ஊறி ஓடுகிறது. சுற்றளவில் உள்ள கிணறுகள் இந்த ஊற்று நீரால் நிரம்பி வயல்வெளியில் பாய்ந்து ஓடுகிறது.

மேலும் ஒடுவன்பட்டி ஊருணி உள்ளிட்ட குளங்களில், மழை நின்று பல நாட்களுக்குப் பிறகும் மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us