sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மேய்ச்சல் நிலத்தில் நர்சரி பண்ணை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

/

மேய்ச்சல் நிலத்தில் நர்சரி பண்ணை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

மேய்ச்சல் நிலத்தில் நர்சரி பண்ணை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

மேய்ச்சல் நிலத்தில் நர்சரி பண்ணை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு


ADDED : பிப் 12, 2025 06:43 AM

Google News

ADDED : பிப் 12, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : செய்களத்துார் அருகே உள்ள கிராம பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு வழங்கியதை தொடர்ந்து வனத்துறையினர் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்களத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்,விவசாய சங்க நிர்வாகிகள் இப்பகுதி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் என்பதால் இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நேற்று வனத்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தபோது காவிரி வைகை குண்டாறு பாசன சங்க விவசாய சங்க நிர்வாகி ராமமுருகன் மற்றும் பலர் பணியை நிறுத்த வேண்டுமென்று வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அங்கும் விவசாயிகளுக்கும்,வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us