sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்மாய்களில் மடை கட்டியவர்களுக்கு நிதி இழுபறி.. முதல்வரிடம் புகார் அளித்த ஒப்பந்ததாரர்கள்

/

கண்மாய்களில் மடை கட்டியவர்களுக்கு நிதி இழுபறி.. முதல்வரிடம் புகார் அளித்த ஒப்பந்ததாரர்கள்

கண்மாய்களில் மடை கட்டியவர்களுக்கு நிதி இழுபறி.. முதல்வரிடம் புகார் அளித்த ஒப்பந்ததாரர்கள்

கண்மாய்களில் மடை கட்டியவர்களுக்கு நிதி இழுபறி.. முதல்வரிடம் புகார் அளித்த ஒப்பந்ததாரர்கள்


ADDED : ஜன 30, 2025 09:50 PM

Google News

ADDED : ஜன 30, 2025 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை மூலம் அந்தந்த ஊராட்சிகளின் கீழ் உள்ள கண்மாய்களில், வேலை உறுதி திட்ட நிதி மூலம் மடைகள் கட்ட 2023-2024ம் ஆண்டு நிதியில் திட்டமிட்டனர்.

அந்த ஆண்டு மாவட்ட அளவில் மடைக்கு ரூ.5.25 லட்சம் வீதம் 1,269 மடைகளுக்கு ரூ.66.62 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தந்த ஊராட்சி செயலர்கள் பெயரில் பணிக்கான உத்தரவு வழங்கி, அவர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மடைகளை கட்ட தீர்மானிக்கப்பட்டது.

இந்த பணிகளில் 10 சதவீதம் கண்டிப்பாக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு செய்ய வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட 1269 கண்மாய் மடைகளில், 103 மடைகளில் பலர் வேலை உறுதி திட்ட ஊழியர்களை பயன்படுத்தாமலும், பலர் மடைகளே கட்டாமல் விட்டுவிட்டனர்.

கட்டாமலும், வேலை உறுதி திட்ட ஊழியர்களை பயன்படுத்தாமல் கட்டிய மடைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரத்து செய்துவிட்டனர். இதனால், மடைகளை கட்டியவர்கள் தங்களுக்கான நிதியை வழங்க வேண்டும் என தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜித்திடம் பல முறை புகார் அளித்தனர். அவரும், அரசுக்கு எழுதி அனுப்பியுள்ளதாக தெரிவித்து வருகிறார்.

மடை கட்டியதில் ரூ. 5.40 கோடி இழுபறி


ஆனால், 2024 மார்ச்-சில் பணிமுடித்து 11 மாதங்களாகியும், மடைக்கான பில் தொகையை வழங்கவில்லை எனக்கூறி ஒப்பந்ததாரர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அளித்துவிட்டனர். மேலும் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை இயக்குனர் பொன்னையாவும் இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கலெக்டர், திட்ட இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணி முடிந்த ஒப்பந்ததாரர்களிடம், மடை கட்டியதற்கான ஆதார புகைப்படத்துடன், நிதி வேண்டி விண்ணப்பமும் பெற்று வருகின்றனர். உரிய ஆதாரத்துடன் 40 பேர் மட்டுமே மடை கட்டியதாக மனு அளித்துள்ளனர். கட்டாதவர்கள், கட்டியும் பணம் பெறாதவர்கள் என 103 மடைகளுக்கு ரூ.5.40 கோடி நிதி இழுபறி நிலையில் உள்ளது.

நிதியை விடுவிக்க நடவடிக்கை


திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) வானதி கூறியதாவது:

கண்மாய்களில் மடை கட்டியும் நிதி பெறாதவர்களிடம் உரிய ஆதாரங்களை பெற்று, பணிக்கான உத்தரவை தயாரித்து அதன் மூலம் அவர்களுக்கான நிதியை விடுவிக்க உள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us