ADDED : ஏப் 17, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு வாரத்தையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சார்பில் தீத்தொண்டு நாள் விழா அனுசரிக்கப்பட்டது.
ஆசிரியர் முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தேவகோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கணேசன் தீ விபத்து குறித்தும் அணைப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.