ADDED : மார் 21, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலை ரோட்டில்உள்ள ம.கோவில்பட்டி கோயில் கண்மாய் பகுதிகளில் அறுவடை முடிவற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.
நேற்று காலை 8:30 மணிக்கு கிராமப் பெரியவர்கள் மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். கரைகளில் தயாராக இருந்த ஏராளமானோர் ஒரே நேரத்தில் கண்மாயில்இறங்கி ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.
அனைவருக்கும் கெண்டை, கெளுத்தி, விரால் என சிறியது முதல் பெரியது வரையினான மீன்கள் அதிக அளவில் கிடைத்தது.