sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

/

திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்


ADDED : மார் 06, 2024 06:39 AM

Google News

ADDED : மார் 06, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனம் புதுார் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பூமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசியில் பத்து நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இரவு 8:50 மணிக்கு கொடிமரத்திற்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்திற்கு பின் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பூ மாலைகள் கொடிமரத்திற்கு அணிவிக்கப்பட்டது. நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். கொடியேற்ற வைபவத்தை பாபு பட்டர் நடத்தி வைத்தார். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை ஏந்தி வந்து நேர்த்திகடன் செலுத்துவார்கள், மார்ச்12ம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் வேலுச்சாமி, மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us