/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் மூடுபனி வாகன ஓட்டிகள் சிரமம்
/
மானாமதுரையில் மூடுபனி வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : நவ 20, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரையில் நேற்று காலை 8:00 மணிவரை வரை நீடித்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை 8:00 மணி வரை மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த மூடுபனியால் காலை நேரத்தில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல சிரமப்பட்டனர்.