/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.15.12 லட்சம் 'லபக்'
/
பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.15.12 லட்சம் 'லபக்'
ADDED : பிப் 10, 2025 12:13 AM
திருப்புத்துார்; ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகலாபம் தருவதாக கூறி, பெண்ணிடம், 15.12 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார், மாணிக்கவாசக நகர் அன்சாரி மனைவி பாத்திமாபேகம், 25. இவரது போனுக்கு ஜன., 3ல் வந்த வாட்ஸாப் தகவலில், ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக லிங்க் அனுப்பினர். லிங்க்-கை தொட்டு உள்ளே சென்ற போது, முதலீடு ஆலோசகர் போல ஒருவர் பேசினார்.
அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, கூறினார். நம்பி பாத்திமாபேகம், 15 லட்சத்து 12,747 ரூபாய் வரை முதலீடாக செலுத்தி இருந்தார்.
அதற்கான லாப தொகை வழங்கவில்லை. சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. பண மோசடி குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.