/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி
/
முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி
ADDED : செப் 16, 2025 04:22 AM
சிவகங்கை: தேவகோட்டை புதுார் தெற்கு தெரு ராமநாதன் 81.ராணுவத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றார். இவருக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகனின் வீட்டில் கீழ் பகுதியில் அவரது மகனும், மேல் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரும் வசித்து வருகின்றனர். தன்னால் மேல் மாடிக்கு நடந்து செல்ல முடியவில்லை எனக்கூறியுள்ளார். இதற்கு அவரது மகன் வீட்டை காலி செய்து கொள், இல்லாவிடில் வாடகை தர வேண்டும் என கேட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தேவகோட்டை கோட்டாட்சியர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதில் அதிருப்தியான முன்னாள் ராணுவ வீரர் நேற்று காலை 11:45 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். எஸ்.ஐ.,க்கள் செல்வராஜ், அமுதா அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.