ADDED : நவ 05, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார், பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், டாஸ்மாக் மேலாளர் சிவக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை கேட்டு 255 பேர் மனு அளித்தனர். இதன் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.