ADDED : ஜூலை 01, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அங்கு, சமையலராக வேலை செய்த காரைக்குடியைச் சேர்ந்த தமிழரசன் 35, சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தமிழரசன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.