sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நன்றாக விளைந்தும் குறைந்த மகசூல்

/

நன்றாக விளைந்தும் குறைந்த மகசூல்

நன்றாக விளைந்தும் குறைந்த மகசூல்

நன்றாக விளைந்தும் குறைந்த மகசூல்


ADDED : பிப் 13, 2025 06:54 AM

Google News

ADDED : பிப் 13, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மகசூல் பாதிக்கும் குறைவாக கிடைத்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார், எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தனர். பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், இந்தாண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். காலம் தவறி பெய்த மழை, பனி உள்ளிட்ட காரணங்களால் பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டது. தற்போது தாலுகா முழுவதும் பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவைவிட பாதிக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பித்தரைச்செல்வம், விவசாயி, மேலவண்ணாரிருப்பு: வழக்கமாக ஏக்கருக்கு 40 மூடை வரை மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு நல்ல மழை பெய்திருந்த நிலையில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் சராசரியாக ஏக்கருக்கு 18 மூடை தான் நெல் கிடைத்துள்ளது. இதுவரை விவசாயக் கூலிக்காக செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் வாங்கிய கடனையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us