sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காததால்  பள்ளி வேனில் மோதி விபத்து 

/

அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காததால்  பள்ளி வேனில் மோதி விபத்து 

அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காததால்  பள்ளி வேனில் மோதி விபத்து 

அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காததால்  பள்ளி வேனில் மோதி விபத்து 


ADDED : ஆக 16, 2025 02:36 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் தனியார் பள்ளி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 30 மாணவிகள் காய மடைந்தனர்.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை பள்ளி மாணவிகள், பயணிகளை ஏற்றிக்கொண்டு (வண்டி எண்: டி.என்.63-1591) காலை 11:50 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது.

இந்த பஸ் சிவ கங்கையில் இருந்து கோர்ட் வாசல், இடைய மேலுார் உட்பட பல்வேறு கிராமங்களை சுற்றி வந்து, உடையநாதபுரம் சேர்கிறது அரசு பஸ்சை டிரைவர் சிவகங்கையை சேர்ந்த அய்யப்பன் 30, ஓட்டினார்.

கண்டக்டர் சிவலிங்கம் 37, பணிபுரிந்தார். இந்த பஸ்சில் நேற்று 10 பள்ளி மாணவிகள், பெற்றோர் வந்தனர். நேற்று மதியம் 12:15 மணிக்கு மதுரை முக்கு வழியாக திருப்புத்துார் ரோட்டில் சென்றது.

அப்போது பெருமாள் கோயில் தெரு சந்திப்பில் எதிரே சோழபுரத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை வந்த தனியார் பள்ளி வாகனம் சென்றது. அப்போது அரசு டவுன் பஸ் பிரேக் பிடிக்காததால், எதிரே வந்த பள்ளி வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதனால், பள்ளி வேன், பஸ்சில் இருந்த ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us