ADDED : ஆக 30, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மத்திய அரசு அறிவித்த 8வது சம்பளக் குழுவை உடனே செயல்படுத்த வலியுறுத்தி, சிவகங்கையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முத்தையா தலைமை வகித்தார். திருப்புவனத்தில் மீனா, மானா மதுரையில் சிவக்குமார், சாக்கோட்டையில் சுந்தரம், சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தனபால், திருப்புத்துாரில் தவுபிக் அகமது, சிங்கம்புணரியில் ேஷக் அப்துல்லா, மதிவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கலைச்செல்வி, மகளிர் அமைப்பாளர் லதா, துணை தலைவர் பாண்டி, இணை செயலாளர் பயாஸ் அகமது, தணிக்கையாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

