sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத அவலம்! அமைச்சர் தொகுதியில் இடைநிற்றல் அதிகரிப்பு

/

அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத அவலம்! அமைச்சர் தொகுதியில் இடைநிற்றல் அதிகரிப்பு

அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத அவலம்! அமைச்சர் தொகுதியில் இடைநிற்றல் அதிகரிப்பு

அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத அவலம்! அமைச்சர் தொகுதியில் இடைநிற்றல் அதிகரிப்பு


ADDED : ஜூன் 12, 2025 10:52 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லல் அருகே உள்ள ஆலங்குடி மேலமாகாணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 7 ஏக்கரில் அமைந்துள்ள இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு தற்போது 3 வகுப்பறையுடன் மட்டுமே பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் மற்ற இரண்டு வகுப்பு தலைமை ஆசிரியர் அறையிலும் கம்ப்யூட்டர் ஆய்வகத்திலும் நடக்கிறது.

போதிய வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர வைக்கப்படுகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை உயராததோடு, பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் முடியவில்லை. வெளியூருக்கு தங்களது பெண் குழந்தைகளை அனுப்ப அச்சமடைந்த பெற்றோர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.

அமைச்சர் பெரியகருப்பன் தொகுதிக்குட்பட்ட இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டிக் கொடுப்பதற்கும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில்: 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கட்டட வசதி இல்லாததால், 110 ஆக மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயர்நிலை படிப்பை முடித்து, மேல்நிலைப்பள்ளிக்கு காரைக்குடி, கல்லல், செம்பனுார், திருக்கோஷ்டியூர், திருப்புத்துார் பகுதிக்கு மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. பல பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை, வெளியூர் அனுப்ப அச்சப்பட்டு பாதியில் படிப்பை நிறுத்துகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பணம் கட்டப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தாலும் மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக தரம் உயர்த்துவதில் சிக்கல் நிலவுகிறது. மாணவர் எண்ணிக்கையை தரம் உயர்த்த போதிய வகுப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இது குறித்து பல முறை எம்.எல்.ஏ., எம்.பி.,யிடம் கோரிக்கை எடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.






      Dinamalar
      Follow us