sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரூ.25 லட்சம் நிவாரணத்திற்கு அரசு மவுனம் 

/

ரூ.25 லட்சம் நிவாரணத்திற்கு அரசு மவுனம் 

ரூ.25 லட்சம் நிவாரணத்திற்கு அரசு மவுனம் 

ரூ.25 லட்சம் நிவாரணத்திற்கு அரசு மவுனம் 


ADDED : ஜூலை 31, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை 29, விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் தாக்கி இறந்த வழக்கில் ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசிடமிருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் 29. இவர், பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த 9.5 பவுன் நகையை திருடியதாக கூறி, மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோகித்குமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

ஜூலை 3 ம் தேதி நடந்த விசாரணையில் அரசு தரப்பில் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம், 3 சென்ட் இலவச பட்டா, அஜித்குமார் தம்பி நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவினில் வேலை தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 22 ல் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அஜித்குமாருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள், அரசு இழப்பீடாக ரூ.50 லட்சம் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த இடைக்கால நிவாரணமாக அரசு ரூ.25 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் அரசு தரப்பில் இருந்து இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.






      Dinamalar
      Follow us