/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டதேவி கோயிலில் கவர்னர் சுவாமி தரிசனம்
/
கண்டதேவி கோயிலில் கவர்னர் சுவாமி தரிசனம்
ADDED : மே 23, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே ராமாயண புராணத்தோடு கலந்த கண்டதேவிக்கு தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று மாலை வந்தார்.
இங்குள்ள சிறகிழிநாதர் என்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு வந்த கவர்னரை தலைமை குருக்கள் தாஸ் தலைமையில் கோயில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பூர்ண கும்ப மரியாதை யுடன் வரவேற்றனர். கோயிலுக்குள் சொர்ணமூர்தீஸ்வரர், பெரியநாயகி அம்மனையும் மற்றும் சுவாமிகளையும் தரிசனம் செய்தார்.
கடந்தாண்டு ஓடிய தேரை பார்வையிட்டு தொட்டு வணங்கினார்.
நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவகங்கை சமஸ்தான நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக நான்கு நாட்டைச் சேர்ந்தவர்கள், கிராமத்தினர் வரவேற்றனர்.