sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை அருகே கம்பர் கோயிலில் கவர்னர் வழிபாடு

/

சிவகங்கை அருகே கம்பர் கோயிலில் கவர்னர் வழிபாடு

சிவகங்கை அருகே கம்பர் கோயிலில் கவர்னர் வழிபாடு

சிவகங்கை அருகே கம்பர் கோயிலில் கவர்னர் வழிபாடு


ADDED : ஏப் 13, 2025 03:29 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பர் கோயிலில் நேற்று காலை 11:00 மணிக்கு தமிழக கவர்னர் ரவி வழிபட்டார்.

நாட்டரசன்கோட்டையில் கம்பர் கோயில் (நினைவிடம்) உள்ளது. ஆண்டு தோறும் பங்குனியில் இங்கு கம்பன் விழா நடைபெறும்.

முதல் மூன்று நாட்கள் காரைக்குடியிலும், நான்காம் நாள் நாட்டரசன்கோட்டை கம்பர் கோயிலில் பங்குனி அத்தத் திருநாள் விழாவாகவும் நடைபெறும்.

நேற்று நாட்டரசன்கோட்டையில் அத்தத் திருநாள் விழா நடந்தது. விழாவிற்கு காலை 11:04 மணிக்கு தமிழக கவர்னர் ரவி வந்தார். அவருக்கு விழா குழுவினர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். பின்னர் அவர் கம்பர் கோயிலில் வழிபட்டார்.

கோயில் முன்பு நடந்த கம்ப ராமாயண பாடல்கள் நிகழ்ச்சியை 10 நிமிடம் அமர்ந்து கேட்டார். இசை குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

பா.ஜ., கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்த பின்னர் அங்கிருந்து காலை 11:34 மணிக்கு புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us