நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். முதல்வர் நாவுக்கரசு வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜோதிபாசு, மாணவர்கள் 293 பேருக்கு பட்டங்களை வழங்கினார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குநர் அருணாசலம், முன்னாள் தமிழ் துறை தலைவர் ஆறுமுகம் பங்கேற்றனர்.

