ADDED : மார் 02, 2026 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தபோது, துாய்மை பணியாளர் கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். ஒக்கூர் திருப்பதி நகர் வீரன் 65. இவர் ஒக்கூர் ஊராட்சியில் துாய்மை பணியாளர். நேற்று முன்தினம் மாலை கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்பை சுத்தம் செய்ய சென்றார்.
அப்போது கால்வாய் உரை மூடியை அகற்றியபோது, கால் தடுமாறி விழுந்தார். அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

