ADDED : அக் 01, 2025 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : அக்.,1 மற்றும் 2 ம் தேதி களில் சரஸ்வதி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை இருப்பதால், அக்., 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்களின் வருகை குறைவாக இருக்கும்.
எனவே நிர்வாக காரணத்திற்காக அக்., 2 ல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்கள் மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அக்., 11 அன்று காலை 11:00 மணிக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.