ADDED : ஜூலை 31, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; மதுரை மாவட்டம் மேலுார் அருகே நைத்தான் பட்டியை சேர்ந்த நாகராஜன் 49. முருகம்பட்டியை சேர்ந்த திருப்பதி 45, பழையூரை சேர்ந்த ஜெயபாலன் 48, 3 பேரும் இரண்டு டிப்பர் லாரி மற்றும் இயந்திரம் மூலம் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள பிரவலுார் கண்மாயில் கிராவல் மண் அள்ளியுள்ளனர்.
அப்பகுதி மக்கள், வி.ஏ.ஓ., செல்வக்குமார் மண் அள்ளுவதை தடுத்தனர்.
திருப்பதி, ஜெயபாலன் தப்பினர். நாகராஜன் மற்றும் 2 டிப்பர் லாரி மற்றும் இயந்திரம் 2 யூனிட் கிராவல் மண்ணை அங்கு வந்த கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
மதகுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எஸ்.ஐ., பிரபாகரன் வழக்கு பதிந்து நாகராஜனை கைது செய்தார்.

