/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 9 பேருக்கு குண்டாஸ்
/
சிவகங்கையில் 9 பேருக்கு குண்டாஸ்
ADDED : மே 15, 2025 05:01 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே நெடுவத்தாவு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் 29 கொலையில் தொடர்புடைய தவசுகுடி பிரபாகரன் 35, வளையம்பட்டி ஜனா 21, சேதம்பாள் விக்ரம் 25, மாதவன் நகர் வசந்தகுமார் 24, ஆண்டூரணி சிவா எ ராமச்சந்திரன் 30.
இதேபோல் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வேலுார் ராமச்சந்திரன் எ தங்கத்துரை 35, திருப்பச்சேத்தி போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆவரங்காடு லட்சுமணன் 35, மானாமதுரை சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வேலுார் நல்லுசாமி 44, காரைக்குடி ஸ்டேஷனில் கொலை வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த சதிஷ்வினோஜி 25 ஆகிய 9 பேரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.