ADDED : டிச 23, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: இடையமேலுார் மாயாண்டி சித்தர் பீட குருபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்துநேர்த்தி செலுத்தினர். நேற்று முன்தினம் கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது.
நேற்று காலை 6:00 மணிக்கு பக்தர்கள் கிராம பொதுமக்கள் பால்குடம் எடுத்து மாயாண்டி சித்தரை வழிப்பட்டனர்.
திருவாசகம் வாசிப்பு, மகேஸ்வர பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 4:00 மணிக்கு சுவாமி வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.