ADDED : ஜூலை 27, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் அருகே ஆசிரியர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாத்தப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் விஜயராஜ், மாவட்ட துணை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட பொருளாளர் சேசு சிங்கராயர் உள்ளிட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.