/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜூன் 27, 2025 11:58 PM

மானாமதுரை: இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் திருவிழா நேற்று மாலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இந்த ஆண்டிற்கான திருவிழாவிற்காக நேற்று மாலை 6:00 மணிக்கு சர்ச் எதிர்புறம் இருந்து கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.பின்னர் மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப் தலைமையிலும், திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் முன்னிலையிலும் சர்ச் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
பாதிரியார்கள் பங்கேற்ற திருப்பலி நடந்தது. இதில் சிவகங்கை,ராமநாதபுரம்,விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். மின் அலங்கார தேர் பவனி ஜூலை 4ம் தேதி மாலை 6:00 மணிக்கும், 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு நற்கருணை பெரு விழாவும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார், மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், சேல்ஸ் இளைஞர் பேரவை, திரு இருதய பக்தர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.