sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை கட்டாயம்

/

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை கட்டாயம்

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை கட்டாயம்

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை கட்டாயம்


ADDED : பிப் 08, 2025 04:57 AM

Google News

ADDED : பிப் 08, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பணி நேரத்தில் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என 2021ல் அரசாணை 363ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் யாரும் அணிவதில்லை.

இதனால் அரசு அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அதிகாரிகள் யார், ஊழியர்கள் யார் என தெரியாமல் புரோக்கர்களின் பிடியில் சிக்கி பணத்தை இழப்பதுடன் அவர்களின் கோரிக்கையும் நிறைவேறாமல் தவிக்கின்றனர்.

இதனை தவிர்க்க அனைத்து அரசு ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என கோரி கீழபுதுக்கோட்டை சமூக ஆர்வலர் லோகநாதன் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித்திடம் புகார் மனு கொடுத்தார்.

கலெக்டர் ஆஷாஅஜித் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 90 அரசு துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும், இதனை உறுதி செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us