/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிகரிப்பு மானாமதுரை, இளையான்குடியில் வெயில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க யோசனை
/
அதிகரிப்பு மானாமதுரை, இளையான்குடியில் வெயில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க யோசனை
அதிகரிப்பு மானாமதுரை, இளையான்குடியில் வெயில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க யோசனை
அதிகரிப்பு மானாமதுரை, இளையான்குடியில் வெயில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க யோசனை
ADDED : மார் 11, 2024 11:26 PM

மானாமதுரை : மானாமதுரை,இளையான்குடி உட்பட பல்வேறு பகுதிகளிலும் கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பொதுமக்கள் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க
காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு, இதய பாதிப்பு,பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளன.
ஆகவே அதிக உடல் வெப்பநிலையில் மயக்கம் ஏற்பட்டவர்கள், குழப்பமான மனநிலையில் இருப்பவர்கள் ஆடையின் மீது குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், 108, 104 எண்களில் மருத்துவ உதவியை நாட வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜுஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அதிகம் குடிப்பது நல்லது.
பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்,நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பதுடன், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கர்ப்பிணிகள், முதியவர்கள் குழந்தைகள் உடல்நலம் சரியில்லாதவர்கள் வெளியே செல்லும்போது, காலணிகளை அணிவதுடன், மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடையை கொண்டு செல்ல வேண்டும்.
.பொதுமக்கள் செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

