sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு

/

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, கத்தரி விலை உயர்வு


ADDED : அக் 04, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 04, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது.

மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இந்த வாரம் ஒரு கிலோ ரூ. 70க்கும், நாட்டு கத்தரிக்காய் ரூபாய் 80க்கும், பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் ரூ.200க்கும், பல்லாரி வெங்காயம், சின்ன வெங்காயம் ரூ. 50க்கும், பச்சை மிளகாய் ரூ.60க்கும், பீட்ரூட், கேரட், அவரை ரூ. 60க்கும், முள்ளங்கி, சவ்சவ், சுரைக்காய் ரூ. 80க்கும் தேங்காய் சிறியதுஒன்று ரூ. 20க்கும், பெரியது ரூ.30 என விற்பனையாகி வருகிறது.

வியாபாரிகள் கூறியதாவது:

தக்காளி மற்றும் கத்தரிக்காய் போதிய வரத்து இல்லாமல் விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் அதன் விலையும் குறையும் என்றனர்.






      Dinamalar
      Follow us