ADDED : மார் 27, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: இந்திய கம்யூ., சிவகங்கை மாவட்ட கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட உதவி செயலாளர் கோபால் தலைமை வகித்தார். தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் சாத்தையா, உதவி செயலாளர் மருது, விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் மணவாளன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டிமீனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு விழாவின் போது காரைக்குடியில் இருந்து மானாமதுரை வரை பல்லவன் ரயிலை நீட்டித்து புதிய அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.