/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பலனில்லாத காப்பீடு திட்டம் கிராம அலுவலர் சங்கம் குமுறல்
/
பலனில்லாத காப்பீடு திட்டம் கிராம அலுவலர் சங்கம் குமுறல்
பலனில்லாத காப்பீடு திட்டம் கிராம அலுவலர் சங்கம் குமுறல்
பலனில்லாத காப்பீடு திட்டம் கிராம அலுவலர் சங்கம் குமுறல்
ADDED : ஜூன் 04, 2025 12:59 AM
காரைக்குடி: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் ரா. போசு கூறுகையில்:
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, அரசு இன்சூரன்சிற்கு பணத்தை பிடித்தம் செய்கிறது. 2022 வரை ரூ.350 பிடித்தம் செய்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ரூ.497 பிடித்தம் செய்கின்றனர்.
ஆனால் ஒரு பயனும் இல்லை. பணமில்லா மருத்துவம் என்று அட்டை கொடுக்கின்றனர். பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்த மருத்துவ அட்டையை ஏற்றுக் கொள்வதில்லை.
முதல்வர் காப்பீட்டு திட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட, இந்த மருத்துவ அட்டைக்கு கொடுப்பதில்லை. தனியார் மருத்துவமனையில், மருத்துவ காப்பீட்டு அட்டையை ஏற்றுக் கொள்வதில்லை. பணத்தை முதலில் கட்ட சொல்கின்றனர்.
பிறகு அதற்கான பணத்தை, கோர்ட் மூலம் தான் பெற வேண்டி உள்ளது. இதற்காக, மாவட்டத்தில் தனி அலுவலர் நியமித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. இப்பிரச்னை சம்பந்தமாக அரசும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் கேள்வி கேட்பதில்லை என்றார்.