sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விளை நிலமாக்க மானியம்  வேளாண் இணை இயக்குனர் தகவல் 

/

விளை நிலமாக்க மானியம்  வேளாண் இணை இயக்குனர் தகவல் 

விளை நிலமாக்க மானியம்  வேளாண் இணை இயக்குனர் தகவல் 

விளை நிலமாக்க மானியம்  வேளாண் இணை இயக்குனர் தகவல் 


ADDED : ஜூலை 04, 2025 02:59 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை,விளைநிலமாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது என வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, இத்திட்டத்தில் தரிசு நில தொகுப்பு, தனிநபர் தரிசு நில மேம்பாடு, தெளிப்பான், வரப்பில் பயறு, உயிர் உரங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

இம்மாவட்டத்தில் 86 கிராமங்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக நீண்ட கால தரிசு நிலங்களை தெரிவு செய்து முட்புதர்களை அகற்றி, சமன் செய்து அங்கு பலன் தரும் பழ மரக்கன்றுக் நட மானியம் வழங்கப்படும்.

ஆழ்குழாய் கிணறு, மின் இணைப்பு செலவை அரசே ஏற்கும். சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும். மொத்தமாக தரிசு நிலங்கள் இல்லாத இடங்களில் தனி நபர் நிலங்களில் முட்புதர் அகற்றி, உழவு செய்து சாகுபடிக்கு கொண்டு வர எக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படும்.

தரிசு நிலங்களை மேம்படுத்திய பின் மத்திய, மாநில அரசு மானியங்களில் சிறுதானியம், பயறு வகை, எண்ணெய் வித்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும். தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us