sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாலைக்கிராமம் கோயிலில் பங்குனி விழா துவக்கம்

/

சாலைக்கிராமம் கோயிலில் பங்குனி விழா துவக்கம்

சாலைக்கிராமம் கோயிலில் பங்குனி விழா துவக்கம்

சாலைக்கிராமம் கோயிலில் பங்குனி விழா துவக்கம்


ADDED : மார் 17, 2024 12:47 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

ராமநாதபுரம் சமஸ்தானம்,தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வள்ளி,தெய்வானை சன்னதியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற காப்பு கட்டுதலுக்காக அதிகாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமத்துடன், ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டிய பின்னர் பக்தர்களும் காப்புக் கட்டிகொண்டனர். தேவஸ்தான செயல் அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் சாலைக்கிராமம், இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பங்குனி உத்திர திருவிழா மார்ச் 25ம் தேதி அன்று பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட உள்ளனர். ஏற்பாடுகளை சாலைக்கிராமம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us