sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோயில்களில் பங்குனி விழா துவக்கம் ; தாயமங்கலத்திற்கு சிறப்பு பஸ் இயக்கம்

/

கோயில்களில் பங்குனி விழா துவக்கம் ; தாயமங்கலத்திற்கு சிறப்பு பஸ் இயக்கம்

கோயில்களில் பங்குனி விழா துவக்கம் ; தாயமங்கலத்திற்கு சிறப்பு பஸ் இயக்கம்

கோயில்களில் பங்குனி விழா துவக்கம் ; தாயமங்கலத்திற்கு சிறப்பு பஸ் இயக்கம்


ADDED : மார் 14, 2024 11:43 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : பங்குனி நேற்று துவங்கியதை தொடர்ந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவிற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா வரும் 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.முக்கிய விழாவான பொங்கல் விழா வரும் ஏப்ரல் 4ம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீச்சட்டி, கரும்பாலை தொட்டில், முடிக்காணிக்கை, ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை தரிசனம் செய்வர்.

பங்குனி பிறந்த நேற்று ஏராளமான பக்தர்கள் தாயமங்கலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தனர். இதற்காக காரைக்குடி, மதுரை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us