/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கடை அள்ள ஊழியர் இல்லை கவுன்சிலருக்கு ஆய்வாளர் பதில்
/
சாக்கடை அள்ள ஊழியர் இல்லை கவுன்சிலருக்கு ஆய்வாளர் பதில்
சாக்கடை அள்ள ஊழியர் இல்லை கவுன்சிலருக்கு ஆய்வாளர் பதில்
சாக்கடை அள்ள ஊழியர் இல்லை கவுன்சிலருக்கு ஆய்வாளர் பதில்
ADDED : மே 27, 2025 12:50 AM
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
அய்யப்பன்: எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணி கிடப்பில் உள்ளது. பணிகளுக்கு இன்னும் டெண்டர் விடப்படாமல் உள்ளது.
கமல கண்ணன்: அனுமதி வழங்கியும் திட்டப்பணிகளுக்கான டெண்டர் நடைபெறவில்லை.
அகிலா குமாரி: இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது.
வடிவேல் முருகன்: 1500 வீடுகள், 2500 கடைகள் உள்ளன சாக்கடை அகற்றப்படுவதில்லை.
சுகாதார ஆய்வாளர்: சாக்கடை சுத்தம் செய்ய நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.
தலைவர்: சாக்கடை சுத்தம் செய்ய கூடுதல் பணியாளர் கேட்டு எழுதுங்கள். மூன்று மாதமாக சிறு சிறு காரணங்களால் டெண்டர் எதுவும் நடக்கவில்லை. அதிகாரிகள் விரைந்து டெண்டர் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.